வவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண் ஒருவர் காயம்!

வவுனியா ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா கல்மடுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே காயமடைந்தவராவர். குறித்த பெண் தமது வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போதே, விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்து, அனர்த்தம் நிகழ்ந்தாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த பெண் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews