மாணவனின் காலணிக்குள் நாக பாம்பு…!

கொழும்பு ஆனந்த கல்லூரியில் கல்வி  பயிலும் 13 வயதான மாணவன் அணிந்திருந்த காலணிக்குள் சிறிய நாக பாம்பு குட்டி இருந்த சம்பவம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. கடவத்தையை சேர்ந்த இந்த மாணவன், பாடசாலை பேருந்தில் பாடசாலைக்கு... Read more »

பேரே வாவியில் தள்ளிவிடப்பட்ட நபர்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை…..!

கடந்த மே மாதம் 09ம் திகதி பேரே வாவியில் தள்ளிவிடப்பட்ட நபர்கள் தொடர்பில் பொலிசார் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் உட்பட 20 பேர் இவ்வாறு பேரே வாவியில் தள்ளிவிடப்பட்டனர். காலி முகத்திடல் தாக்குதல் சம்பவத்தின் பின்னர்... Read more »

இளைஞர், யுவதிகள் ரணில் ராஜபக்சவையும், அரசாங்கத்தையும் விரட்டியடிப்பார்கள்…!எரங்க குணசேகர.

நாட்டின் இளைஞர், யுவதிகள் ரணில் மற்றும்  ராஜபக்சவையும், இந்த அரசாங்கத்தையும், கட்டாயம் விரட்டியடிப்பார்கள் எனவும் அதனை சட்டங்களால் தடுத்து நிறுத்த முடியாது என எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு எதிராக. இன்று மருதானை சி.எஸ்.ஆர் மண்டபத்தில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தின்... Read more »

நாட்டில் மீண்டும் வேகமாக பரவும் கொரோணா….! பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை.

நாட்டில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் என்றும் பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த உபுல் ரோகண நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமை புறக்கணிக்கப்பட்டுள்ளதால், இந்த பயங்கரமான வைரஸ்... Read more »

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் இன்று முதல் குறைப்பு!

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. லங்கா சதொச ஊடாக குறித்த அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் அறிக்கையொன்றின்... Read more »

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சிறப்புரிமைகள் கிடைக்க வேண்டும்….! மனித உரிமை அணைக்குழு.

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் கிடைக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியாக கிடைக்கும் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம்... Read more »

அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது. அதற்கமைய, நாளை மறுநாள் முதல் அனைத்து ஊழியர்களும்... Read more »

கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை…..! மத்திய வங்கி.

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில், கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய நோக்கங்களுக்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். கடன்... Read more »

உணவு பொருட்களின் விலையுயர்வு, இலங்கை 5ம் இடம்…!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் உள்ளதென உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கைக்கமைய, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதலாவது நாடாக லெபனான் பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி... Read more »

அதிகமான மழைவீழ்ச்சி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை…!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்... Read more »