பேருந்து மோதி ஒருவர் பலி,

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் மகொன, முங்கென பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர்... Read more »

தீவிரமாக கண்காணிக்கப்படும் அரிசி ஆலைகள்!

நாடு முழுவதிலுமுள்ள அரிசி ஆலைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் பணிப்புரைக்கமைய மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அரிசிஆலைகள், சுற்றாடலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராய்வது மற்றும் சுற்றாடல் மாசடைவதை தடுக்கும் வகையிலான... Read more »

மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி

மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் நேற்று முன்தினம்  (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி,... Read more »

பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு இராணுவத்தால் வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல்…..!

வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட  J410 கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட  பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு  வீடு அமைத்து கொடுப்பதற்க்காக யாழ் மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் வந்தன வீரசூரியவினால் நேற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை... Read more »

அக்கராயன் மாகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியமிக்கக் கோரி போராட்டம்……!

கிளிநொச்சி அக்கராயன் மாகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியம்க்கக் கோரி மாணவர்கள், பெற்றோர் போராட்டம் ஒன்றை  நேற்று  மேற்கொண்டுள்ளனர்.   கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு, கடந்த 3 மாதங்களாக அதிபர் நியமிக்கப்படவில்லை.   கடமையிலிருந்த அதிபர் பாடசாலை பொறுப்புக்களிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய அதிபர்... Read more »

மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ள குடத்தனை உப தபாலகம். ஊழல்வாதிகளுக்கு உயரதிகாரிகள் அடைக்கலம், முதியவர்கள் பாதிப்பு, மக்கள் விசனம்…!

திங்கள் கிழமை முதல் குடத்தனை உபதபாலகம் மூடப்பட்டுள்ளமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுசன மாதாந்த கொடுப்பனவு பெறுவதற்க்காக தள்ளாடும் வயதிலும் குறித்த உபதபாலகத்திற்க்கு வருகை தந்து மூன்று நாட்களாக பசியோடும் பட்டிணியோடும்  காத்திருக்கின்றனர். குடத்தனை உபதபாலகருக்கு எதிராக இதுவரை 12 முறைப்பாடுகள் பருத்தித்துறை போலீஸ்... Read more »

இன்று 3 மணிநேரம் மின் வெட்டு….!

இன்றைய  தினம் (25) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 1 மணிநேரமும் 40 நிமிடங்களும், இரவு ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும்... Read more »

கடன் சலுகை தொடர்பிலான நிலைப்பாட்டை தளர்த்துமாறு சீனாவிடம் ஜனாதிபதி கோரிக்கை…!

இலங்கைக்கான கடன் சலுகை தொடர்பிலான நிலைப்பாட்டை தளர்த்துமாறு சீனாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ளது. ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல. கடன்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம்….! செல்வம் பா.உ.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டத்தை தயவு செய்து அரசியல் ஆக்காதீர்கள் என நாடளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் உறவுகளிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். வவுனியாவில் நேற்று (23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து... Read more »

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல்….!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, களனி பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் (IUBF) ஒருங்கிணைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர், நாளைய தினம், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை (FR)... Read more »