பேருந்து மோதி ஒருவர் பலி,

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் மகொன, முங்கென பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற அரை சொகுசு தனியார் போருந்து , கொழும்பில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் வடக்கு பயாகலை சந்திக்கு அருகில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin