வெளி உலகத்திற்கு பகிரங்கப்படுத்தப்பட்ட இலங்கையின் இரகசியங்கள்!

ஜனாதிபதி மாளிகை தனியார் சொத்தல்ல. இலங்கை மக்களின் அடையாளம். வீடியோ காட்சிகளை காண்பித்து இரகசிய இடங்களையும் உலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,... Read more »

இலங்கையில் டீசல் பிரச்சினையை தீர்க்க தயாராகும் மத்திய கிழக்கு நாடு…!

இலங்கையில் ஏற்பட்டுள்ள டீசல் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்டாருடன் சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு அருகே மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று 50 சதவீத பேருந்துகளே... Read more »

எந்நிதியும் தருவான் செல்வ சந்நிதியான் கொடியேற்றம் இன்று……!

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானறு செல்வச் சந்நிதியான்  ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று  27.08.2022 பிற்பகல் 2.30 மணியளவில்  கொடியேற்றத்துடன்  மிக மிக  சிறப்பாக இடம்பெறவுள்ளது. அதனைந் தொடர்ந்து பேரூந்தை  திருவிழாவின் போது புரட்டாதி 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், புரட்டாதி 6ம்... Read more »

ஒன்பது வயதான மகளை கொடூரமாக சித்திரவதை செய்த தாய் கைது….!

தனது ஒன்பது வயது மகளை கொடூரமாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாயினால் சித்திரவதைக்கு உள்ளான மகள், கைகால்களில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு... Read more »

வாடிகள் தீக்கிரை. ஒரு கோடி ரூபாவிறக்கு மேல் வலைகள் எரிந்து நாசம்……!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று பிற்பகல்  6:00 மணியளவில் மூன்று கடற்றொழில்   வாடிகள்  தீக்கிரையாகியுள்ளது. குறித்த வாடிகள் தீயில் எரிவதை பார்த்த மீனவர்கள் அதை அணைக்க முற்பட்ட முயற்சியும் தோல்வியடைந்த நிலையில்  மூன்று வாடிகளும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சிறு... Read more »

12 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு ஏற்படும் நிலை….! பொது பயன்பாட்டு ஆணைக்குழு.

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி மற்றும் நீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டும் போதிய நிலக்கரி மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் 12 முதல் 13 மணி நேரம் வரை மின்வெட்டு அதிகரிக்கும் எனவும் ஜானக ரத்நாயக்க எச்சரித்துள்ளார். அத்துடன்,... Read more »

இறக்குமதிக்கு தடை, மக்களுக்கு பாரிய பாதிப்பு…! புழுது ஜயகொட.

300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட... Read more »

நீர் கட்டணம் அதிகரிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

நாட்டில் வடிகால் அமைப்புக்குரிய நீர் பாவனைக்கான கட்டணங்கள் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, மின் பாவனைக்கான கட்டணங்களும் கடந்த வாரத்தில் அதிகரிக்கப்பட்டிருந்தது.... Read more »

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றமில்லை – ரணில் கடும் பிரயத்தனம்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றங்கள் எவையும் ஏற்படாத நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் மீண்டும் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இதன்போது சிறிலங்கா அரசாங்கத்தின் மின் கட்டண திருத்தம், மதுவரிச் சட்டம் போன்றவற்றின் சீர்திருத்த முன்மொழிவுகளைக் கோரியுள்ள நாணய நிதியம் எதிர்வரும்... Read more »

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு: பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அழிவுகளையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் கடந்த ஜூன் முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களால் 343 பேர் சிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »