நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கியதாக இராமேஸ்வரம்  மீனவர்கள் குற்றச்சாட்டு:

ராமேஸ்வரம் செப் 20, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம்  (19/09/2022) சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். நேற்று முன்தினம்  மாலை  மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட  இலங்கை கடற்படையினர் எல்லை... Read more »

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12. ஈழத் தமிழர்களை இந்திய கடலோர காவல்படை மீட்பு: புலம் பெயர்வாளர்கள்  எண்ணிக்கை 169ஆக உயர்வு:

நாட்டில்  ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உயிரை காப்பாற்றி கொள்ள படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த இரண்டாம், மணல் திட்டில்,  உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்கள் 12 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர், அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை!

இலங்கையில் மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று அனுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

உக்ரைனில் பிடிபட்ட இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்

ரஷ்ய இராணுவத்தின் பிடியில் இருந்து உக்ரைன் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட ஏழு இலங்கையருக்கும் நாடு திரும்ப விருப்பமில்லை என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அழைத்துச் செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஏழு பேரும்... Read more »

செவ்வாய்க்கிழமைக்கான மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமைக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை பொது பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி இன்றையதினம் ஒரு மணி 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது. மூன்று வலயங்களில் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

அமைச்சர் டக்ளஸ் அளித்த உறுதிமொழி!

தமிழக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடபகுதியைச் சேர்ந்த அனைத்து இளைஞர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 69 தமிழ் இளைஞர்களின் உறவினர்கள் குழுவுடன் இடம்பெற்ற... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே கால அவகாசம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், 10 மில்லியன் ரூபாய் நீர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று... Read more »

அரசாங்கம் நெல்லை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முன்வர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

புத்தளம்- எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் பாரிய சவாலுக்கு மத்தியில் விவசாயத்தை மேற்கொண்டதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இம்முறை 600 ஏக்கர் பரப்பில் சிறுபோகம் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஒரு ஏக்கருக்கான விதை நெல் 8000 ரூபாவிற்கும் ஒரு ஏக்கருக்கான உரம் மூடை 8000... Read more »

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கருத்து

போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய... Read more »

பிரித்தானியாவில் இந்து ஆலயம் மீது தாக்குதல் – 46 பேர் வரையில் கைது

பிரித்தானியாவின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட்... Read more »