சீனத் தூதரகத்தினால் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் ரூபா 43 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் வைத்து, இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ... Read more »

டீசல் விலையை குறைக்குமாறு கோரிக்கை

சகல தரப்பு பொதுமக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் டீசல் விலையைக் குறைக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்கம் பெட்ரோல் ஒரு லீற்றருக்கு 40 ரூபாய் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாடசாலை போக்குவரத்து... Read more »

யாழ் மாவட்ட செயலகத்திற்கு இரு தேசிய விருதுகள்….!

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையினால் “வட மாகாணத்திற்கான சமூக பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் நிகழ்வு” சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.பி.பிரதீபன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை யாழ் தனியார் விடுதியில்  நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை... Read more »

அரச ஊழியர்களுக்காக மாதாந்தம் செலவிடப்படும் பில்லியன் தொகை பணம்! வெளியான தகவல்

இலங்கையில் சுமார் 15 இலட்சம் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 93 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவழிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்போது மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், அடுத்த வருடம் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு... Read more »

ஒரு நாளில் பல மில்லியன்:தாமரை கோபுரத்தின் வருமானம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமான தாமரை கோபுரம் செப்டெம்பர் 15ஆம் திகதி பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதற்கமைய பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்ட முதல் 15 நாட்களில் சுமார் 100,000 நபர்கள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில்,நேற்று(02.10.2022) சுமார் 10,000 பேர்... Read more »

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் உதவி வழங்கிவைப்பு….!

பொருளாதார நெருக்கடி  காரணமாக அண்மையில் குடும்பத் தலைவர்கள் அகால மரணம் அடைந்த இரண்டு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் மற்றும் கனடா கிளை உறுப்பினர்களின் நிதி பங்களிப்பில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  வலி... Read more »

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது .

தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் (01.10.2022) நேற்று முன்தினம் காலை 22 கால்நடைகளை அனுமதிப்பத்திரம் இன்றி வேறு மாவட்டத்துக்கு ஏற்றிச் செல்ல முற்பட்ட வேளை தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்  மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ள தருமபுரரம் பொலீசார் ... Read more »

வல்லிபுரத் தேனமுதம் இசைப்பேழை இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா…..!

வல்லிபுரத் தேனமுதம் பாகம் இரண்டு  எனும் வல்லிபுரம் குருக்கட்டு சித்திவிநாயகர், வல்லிபுர ஆள்வார் ஆலய  இசைப்பேழை இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா நேற்று காலை 9.30 மணியளவில் ஆலய மண்டபத்தில்  தீம்புனல் பத்திரிகை ஆசிரியர் சூரன் ஏ.ரவிவர்மா தலமையில் இடம் பெற்றது. இதில் முதல்... Read more »

மகாந்த காந்தி ஜனன தினத்தில் மக்த்மா காந்திக்கு மலர் அஞ்சலி….!

மாகாந்தியின் ஜனன தினமான நேற்று  பருத்தித்துறை நவீனசந்தையின்  வடமேல் மூலையில் நிறுவப்பட்டுள்ள காந்தியின் உருவச்சிலைக்கு மபருத்தித்துறை நகரசபைத் தலைவர் யோசப் இருதயராஜா,  அறவழிப் போராட்டக்குழு செயலாளர் வி. ஜி.தங்கவேல் ஆகியோர் மலர்மாலை  தூவி அஞ்சலிசெலுத்தினர். இந்நிகழ்வு நேற்று காலை 9:00 மணியளவில் இடம் பெற்றது. Read more »

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இயற்கை எய்தினார்.

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நேற்று  இயற்கை எய்தினார்.  கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வடக்கு மாகாண சபைக்கு தெரிவான இவர், மக்களின் மதிப்பினை பெற்றிருந்தார். ஓய்வுநிலை கிராம சேவையாளரான இவர், ஈழ விடுதலை போராட்டத்திற்கு அரசியல் ரீதியில் பங்களிப்பு வழங்கியதுடன், அரசியல் பணியிலும் ஈடுபட்டார்.... Read more »