ஓய்வு பெற்றவர்கள் சார்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

ஓய்வு பெற்றவர்களின் சேவைக்கு பிந்திய உபகார தொகை தொடர்பில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினர்,இன்று (12.10.2022) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டில்,ஓய்வு பெற்றவர்களின் சேவைக்கு பிந்திய உபகாரத் தொகையை (பணிக்கொடை)... Read more »

விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றிய எரிக்கிற்கு ரணில் வழங்கியுள்ள நியமனம்

ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்மிற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய நியமனமொன்றை வழங்கியுள்ளார். அதன்படி எரிக் சொல்ஹெய்ம், மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் ஆகியோரை தனது சர்வதேச காலநிலை ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.... Read more »

எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று வெளியாகலாம்

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டிடியூட் ஒப் இன்டஸ்ட்ரியல் டெக்னோலஜி நிறுவனம் மூலம் எரிபொருள் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தரம் குறைந்த எரிபொருளை... Read more »

யாழில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் பெண் கைது..!

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உள்பட மூவர் நெல்லியடி காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 20 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்றைய தினம் கரணவாய் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடிய போதே 30 வயது... Read more »

பணவீக்கம் குறைவடையும் – மத்திய வங்கி நம்பிக்கை

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பணவீக்க நிலைமை கிரமமாக குறைவடையும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மின்சாரம், நீர் மற்றும் பெறுமதி சேர் வரி என்பனவற்றினால் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டி அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்தது. எனினும் எதிர்வரும் நாட்களில் பணவீக்கம்... Read more »

மகிந்தவின் அதிரடி அறிவிப்பு – சூடு பிடிக்கும் தென்னிங்கை அரசியல்

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசியத் தேர்தலை எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். மார்ச் மாதத்திற்குப் பின்னர் பொதுத் தேர்தல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக... Read more »

வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் கடந்த 06.10.2022 அன்றைய தினம்  வட்டக்கச்சி மாயனூர் பகுதியில் வசித்துவந்த இளம் குடும்பஸ்தரான 33 வயதுடைய ஜெயசீலன் என்ற 03 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்திருந்தார். வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்... Read more »

யாழில் தனியார் காணியொன்றில் குண்டுகள் மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி – அட்டகிரி பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணியின் உரிமையாளர் உழவு இயந்திரம் மூலம் காணியை உழுதுகொண்டு இருந்தவேளை குறித்த குண்டுகள் இரண்டு பைகளினுள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், குறித்த... Read more »

அரசாங்கம் தேர்தல்களை நடத்த அஞ்சுகின்றது! சஜித் பிரேமதாச விமர்சனம்

தற்போதைய அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு அஞ்சி அதனை ஒத்திவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். அது தொடர்பில் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நெருங்கி வருகின்றது. எனினும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்தல்,... Read more »

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் – அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை தொடர்ந்து பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அதன் ஆழத்தையும் சேதத்தையும் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும் என... Read more »