சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்களின் நிலை தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர். குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள்... Read more »

200 இற்கும் மேற்பட்டவர்களுடன் மற்றுமொரு படகு கடலில் தத்தளிப்பு

இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கடலில் தத்தளித்த நிலையில் ஜப்பான் கடற்படையால் மீட்கப்பட்டு தற்போது வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அகதிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்வோருடன் மற்றொரு படகு நடுக்கடலில் சிக்கித் தவித்த நிலையில், இத்தாலி அந்த... Read more »

விபத்தில் படுகாயமடைந்த பல் வைத்தியபீடத்தின் மாணவி உயிரிழப்பு

கார் மோதியதால் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த நவம்பர் முதலாம் திகதி... Read more »

தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீன பேராயரின் ஆணையாளராக தஞ்சாவூர் பேராயர் கலாநிதி D.சந்திரசேகரன் நியமனம்.

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதம பேராயரின் விசேட ஆணையாளராக திருச்சி – தஞ்சாவூர் ஆதீனத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி D.சந்திரசேகரன் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பதவி நிலையில் இருந்த பேராயர் அதி வணக்கத்துக்குரிய டானியல் தியாகராஜா ஓய்வு பெற்றுள்ளநிலையில், புதிய பேராயர்... Read more »

பயிர்ச் செய்கை இடம் பெறும் பகுதிகளில் மணல் அகழ்வு. விவாசாயிகள் பாதிப்பு…!

கண்டாவாளப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாறு  மற்றும் புளியம்பொக்கனை பகுதிகளில்   பெரும்போக  விவசாய நடவடிக்கைகளில்  மேற்கொள்ளப்பட்ட பகுதிகளினூடாக சென்று நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் குழிகள் தோண்டப்பட்டு  மணல் அகழ்வு  இடம் பெற்று  வருவதாகவும் விவசாயிகள்  தெரிவிப்பதுடன் இதனால் தமது பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும்,... Read more »

பளையில் ஹெரோயின் போதை பொருளுடன் 05 பேர் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி  ஹெரோயின் போதை விற்பனை இடம்பெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரகளின் வீட்டை சுற்றிவளைத்த பளை  பொலீசார் நேற்று பிற்பகல்  600 மில்லி கிராம் ஹெரோயினுடன் 05 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்... Read more »

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

பாடசாலைகளில் தற்போது ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில் புதிதாக எவரையும் இணைத்துக் கொள்ளாமல் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் பொது பரீட்சையொன்றை... Read more »

அடுத்த ஆண்டில் அரச செலவீனம் மேலும் உயரும்

2022ஆம் ஆண்டை விடவும் 2023ஆம் ஆண்டுக்கான அரச செலவீனம் 1,65,700 கோடி ரூபாவால் அதிகரிக்கும் என அரச நிதி தொடர்பான குழுவின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒதுக்கீட்டு... Read more »

மதுபோதையில் பயணித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் திசை மாறி பயணித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரவெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் நேற்று (08.11.2022) மது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில்... Read more »

யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஒன்பது பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்தார். சீரற்ற காலநிலை காரணமாக இன்று காலை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை... Read more »