நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது பயணிகள் கப்பல்

இந்தியா -நாகபட்டினத்திலிருந்து பயணிகள் கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்தியா – நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை – காங்கேசன்துறையை பிற்பகல் 12.30 அளவில் வந்தடைந்தது. காங்கேசன்துறை வந்த செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி... Read more »

அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி! அமைச்சு வெளியிட்ட தகவல்

அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்குஅனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உரிய கொள்கைகளை அமைச்சரவையில் முன்வைத்ததன் பின்னர் வாகன இறக்குமதி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட... Read more »

தேர்தல்கள் ஒத்திவைக்கப்படமாட்டாது- பொதுஜன பெரமுன

அடுத்த மாகாண சபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் ஒத்திவைக்கப்படாமல் நடைபெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் இயல்பாகவே நடத்தப்படும் என்பதால், எந்தக் கட்சிக்கும் அதனை ஒத்திவைக்க வாய்ப்பில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டினார்.... Read more »

ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் கைது!

கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கன்னோருவ இராணுவ முகாமில் கடமையாற்றும் 39 வயதுடைய நபராவார். சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட... Read more »

யாழ்.மாவட்டத்தில் வெளிநாட்டு முகவர் மோசடி மற்றும் காணி மோசடிகள் அதிகரிப்பு! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..!

யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளா செனரத் தெரிவித்துள்ளார்.... Read more »

யாழில் தமிழ் எம்.பிக்களுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு!

யாழில் தமிழ் எம்.பிக்களுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு! பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பென்னி மோர்டான்ட்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று பிற்பகல் 7மணியளவில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன்,... Read more »

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைக்குண்டுடன் கைது! |

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று கை குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி துண்ணாலை பகுதியில், நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பாட்டார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் குறித்த... Read more »

கடலட்டை பிடிக்க கடலுக்குச் செல்வதில் அசௌகரியம்: மன்னார் மீனவர்கள் விசனம்

மன்னார் பள்ளிமுனை கடற்கரையிலிருந்து அட்டை பிடிக்க கடலுக்குச் செல்லும் பள்ளிமுனை கிராம மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதோடு, கடற்படையினர் இடையூறு ஏற்படுத்துவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை பள்ளிமுனை கடற்கரையிலிருந்து கடலட்டை பிடிக்க தொழிலுக்குச் செல்ல முற்பட்டபோது, படகு... Read more »

கல்வி தரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – கல்வி அமைச்சர்

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி தரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் ... Read more »

மலையகத்தில் மின் ஒழுக்கால் இருப்பிடத்தை இழந்த குடும்பங்களுக்கு சந்நிதியான் ஆச்சிரம் பல்வேறு உதவிகள்…!

மலையகத்தில் மின்னொழுக்கால் இருப்பிடத்தை இழந்த 9 குடும்பங்களுக்கு பல்வேறு உதவுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. பதுளை –  மாப்பாகல பிரிவில் உள்ள யூரித் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட  மின் கசிவால் 09 வீடுகள் எரிந்து  உடமைகள் முழுமையாக  அழிந்த நிலையில்  தற்காலிகமாக  பதுளை  மாப்பாகல தமிழ் வித்தியாலயத்தில்... Read more »