பொலிஸ் எனக்கூறி கடையில் பணம் கொள்ளை!

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் 23 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கடைக்குள் நுழைந்த... Read more »

ஆயுத முனையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் ,நேற்று இடம்பெற்றது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி தூவி, அக வணக்கம் செலுத்தப்பட்டது. போர் சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்து துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன்.... Read more »

ஒரே குடையில் திரண்டு முழு அடைப்பை வெற்றியடையச் செய்ய ஒத்துழைக்கவேண்டும்….! சரவணபவன்

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் வாக்கு அரசியலுக்காக போராட்டங்களை முன்னெடுக்கக் கூடாது. மக்கள் மயப்படுத்திய போராட்டங்களையே முன்னெடுக்கவேண்டும். எதிர்காலத்தில் பொது அமைப்புக்கள் உள்பட அனைத்துத் தரப்புக்களுடன் கலந்தாலோசித்து முழு அடைப்புப் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிக்கவேண்டும். எப்படியிருப்பினும் இம்முறை முழு அடைப்பின்... Read more »

பாடசாலை நடவடிக்கைகளை புறக்கணியுங்கள் – பெற்றோர்கள் மாணவர்களிடம் தமிழ் கட்சிகள் வேண்டுகோள்!

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று வெள்ளிக்கிழமை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில்,நாளை நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை... Read more »

முஸ்லிம் மக்களும் ஆதரவு…..!

முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாளைய (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் வர்த்தகர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவர்கள் வெளியிட்ட... Read more »

மரத்துடன் மோதிய பேருந்து! மாணவர்கள் உட்பட 15 பேர் படுகாயம்

தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் மரதன்கடவல பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தே... Read more »

கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகை துறைமுகத்தில் இருந்து, இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14ஆம் திகதி தொடங்கியது. இந்தக் கப்பலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு!

ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதனால் 425 கிராம் உள்ளூர் டின் மீன் 35 ரூபாவால் குறைக்கப்பட்டு 650... Read more »

பேருந்து நிலையத்தில் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவளை பேருந்து தரிக்கும் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பேருந்து நிலைய காவலர்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் 60வயதிற்கு மேற்பட்டவராக இருக்கும் எனவும் இதுவரை யாரும்... Read more »

திருகோணமலையில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் மரணம்

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் தொடருந்தில் மோதுண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(17.10.2023) இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர், முள்ளிப்பொத்தானை  பகுதியைச் சேர்ந்த  டி. சலீம்  என்ற 34 வயதுடைய... Read more »