யாழில் அதிபர், ஆசிரியர்கள் வீதிக்கு இறங்கியதால் பரபரப்பு!

நேற்று முன்தினம் இசுறுபாய முன்பாக அதிபர், ஆசிரியர்கள் நடாத்திய போராட்ட ஊர்வலத்தின் மீது அரசு நடத்திய வன்முறைத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் பாடசாலை நிறைவடைந்த பின்னர் பாடசாலைகளின் முன்பாக அதிபர், ஆசிரியர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர் , யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ்... Read more »

வவுனிக்குளத்தின் கீழான பெரும்போக நெற்செய்கைகாக 6,060 ஏக்கர் ஒதுக்கம்

முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்தின் கீழான பெரும்போக நெற்செய்கைகாக துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட பகுதிகளும், பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளுமாக 6 ஆயிரத்து 60 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற வவுனிக்குளம் காலபோக நெற்செய்கைக்கான பங்கீட்டு கூட்டத்தின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.... Read more »

புறக்கோட்டையில் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்த முப்படையினரும் களமிறக்கம்!

கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினை கட்டுப்படுத்த முப்படையினரும் களமிறக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன-தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் முப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.... Read more »

புறக்கோட்டை தீ விபத்தில் சிக்கிய ஆறுபேர் ஆபத்தான நிலையில்

கொழும்பு புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுடன் 17 பேர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாககொழும்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Read more »

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்…..! அ.அன்னராசா.

வடக்கு மாகாணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிகள் வரும்போது   எம்மையும் சந்தித்து எமது  கடற்றொழிலாளர்களின்  பிரச்சினைகளை  கேட்டறிந்து கொள்ளும் சந்தரப்பத்தை உருவாக்கி தருமாறு வடமாகாண மீனவர் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சி சார்ந்தவர்கள் தவிர்த்து உண்மையான வடக்கு மாகாண மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும்,  கட்றறொழிலாளர்களுக்கும்... Read more »

புதிய அரசியலமைப்பு மூலமே சிஸ்டம் சேஞ் உருவாக முடியும் – சபா குகதாஸ்

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய சட்டங்கள் மூலமாக சிஸ்டம் சேஞ் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். உண்மையில் அரகலய போராட்டத் தரப்பு புதிய அரசியல் அமைப்பின் மூலம் சிஸ்டம் சேஞ் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்றே தங்களது பிரதான... Read more »

மாணவன் ஒருவனின் தாக்குதலுக்கு இலக்காகி இன்னொரு மாணவன் காயம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவனின் உறவினர்கள் பாடசாலைக்கு சென்று, பாடசாலையின் முன்னால் தகராறு செய்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில்... Read more »

தொடர்ந்தும் மூன்றாவது முறையாக தேசிய புத்தாக்கப் போட்டியில் பதக்கம் வெல்லும் வேம்படி மாணவி…!

வருடாவருடம் இலங்கை புத்தாக்குனர் ஆணைகுழுவினரால் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ”சஹசக் நிவமும்” (Sahasak Nimavum ) எனும் பெயரில் நடத்தப்படும் தேசிய புத்தாக்கப்போட்டியின் 2022 ஆம் ஆண்டுக்கான  விருது வழங்கும் விழா (26.10.2023) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச... Read more »

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை! தமிழக தி.மு.க அரசின் தமிழர் விரோதச் செயல் கண்டனத்திற்குரியது -தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை கண்டனம்.

நாடு கடந்த தமிழீழ அரசினால்  15/10/23 ஒழுங்கு செய்யப்பட்ட  இலங்கை மலையகத் தமிழர்களின் 200  ஆண்டுகளின் துயரம்” என தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசு அனுமதி மறுத்திருப்பதை தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு... Read more »

கிளிநொச்சியில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் (26) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தலைமையில்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி... Read more »