நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை! தமிழக தி.மு.க அரசின் தமிழர் விரோதச் செயல் கண்டனத்திற்குரியது -தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை கண்டனம்.

நாடு கடந்த தமிழீழ அரசினால்  15/10/23 ஒழுங்கு செய்யப்பட்ட  இலங்கை மலையகத் தமிழர்களின் 200  ஆண்டுகளின் துயரம்” என தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசு அனுமதி மறுத்திருப்பதை தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் ஈழத்தமிழர்களது  இன விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாக சர்வதேச அரங்கில் முன் நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு வலுவான அமைப்பாக இன்றுவரை நாடு கடந்த தமிழக அரசாங்கமே செயற்படுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எவ்விதமான செயற்பாடுகளையும் ஈழத்தில்  செய்யவிடாது சிறீலங்கா அரசாங்கம் பாரிய தடைகளை விதித்திருக்கின்றது.
இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்ளும் நாட்டிற்குள் வரமுடியாதபடி தடை உத்தரவு  போட்டிருக்கின்றது.
இதற்கான பிரதான காரணம்  சிறீலங்கா அரசுக்கு அரசியல் ரீதியாக பல வழிகளிலும் சர்வதேச அரங்கில் பாரிய அழுத்தங்களை இன்றுவரை பிரயோகிக்கின்ற ஓர் பலமான  அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றமையே காரணமாகும்
இவ்வாறான  சூழ்நிலையில் இன்று இருக்கக்கூடிய தி.மு.க தலைமையிலான தமிழக அரசு ஈழத் தமிழர்கள் விவகாரங்களில் அன்று தொடக்கம் இன்று வரை  எதிராகவே தமிழர் விரோதப் போக்கில்  செயல்பட்டு வருகின்றது. இதற்கு சான்றாக  2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்ட யுத்தம் ஓர் உதாரணமாகும்
நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தமிழகத்தில் தொடரும் தொடர வேண்டும் இதற்கு எதிராக தமிழகத்தில் எந்த கட்சிகள்  தடை போட்டாலும் அத் தடைகளை அவர்கள் திருப்பி பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் தடைகள் அனைத்தும் தமிழக தொப்புள் கொடி உறவுகளால் அனைத்து  வழிகளாலும் எதிர்க்கப்படும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு மிக தெளிவாக வலியுறுத்துவதோடு மேலும் தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசின் தமிழர் விரோதச் செயல்களையும் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
எஸ்.நிஷாந்தன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை

Recommended For You

About the Author: Editor Elukainews