இலங்கையில் 4 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பு இன்மையை எதிர்கொள்கின்றார்கள் – கலாநிதி இ.ஈஸ்வரன்.

இலங்கையில் நாங்கள் தற்போது 22 மில்லியன் மக்கள் வசிக்கின்றோம். அந்த மக்களிலே கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் (அண்ணளவாக 17 சதவீதம்) உணவு பாதுகாப்பு இன்மையை எதிர்கொள்கின்றார்கள். இந்த வருடம் மே மாதம் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது என யாழ்ப்பாண... Read more »

மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல்! மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது . இந்த நிகழ்வானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர்... Read more »

மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில்  மாவீரர்  துயிலுமில்ல  காணியை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல    காணியினை  விடுவிக்க கோரி மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து... Read more »

அனலைதீவில் மீட்கப்பட்ட பெருமளவான கஞ்சா….!

யாழ்ப்பாணம் – அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில், கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போதே நேற்று (10) குறித்த கஞ்சா... Read more »

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் நேற்றைய தினம் 10.11.2023 நடைபெற்றது. கல்லூரியில் உள்ள சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிலைக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பின்னர் தேவாரம் பாடப்பட்டதைத் தொடர்ந்து தேசியக்... Read more »

அராலி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் 10.11.2023 கல்லூரியின் பொது மண்டபத்தில் நடைபெற்றது. விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைக் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்புரை ஆற்றப்பட்டது.... Read more »

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் கறுவா மரக்கன்றுகள் விநியோகம்…!

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு மரநடுகையிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக வியாழக்கிழமை (09.11.2023) பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகளை வழங்கியுள்ளது. பாடசாலை அதிபர் ச.... Read more »

சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு விழா 2023….!

வடமராட்சி வடக்கு பிரதேச செயலககம் மற்றும் வடமராட்சி வடக்கு கலாசார பேரவை இணைந்த வடமராட்சி வடக்கு கலாசார பெருவிழா வல்வெட்டித்துறை வல்வை முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் தலமையில் 10.11.2023 காலை 9:30 மணியளவில் ஆர்மபமானது. இதில்... Read more »

வெள்ளத்தினால் 11586 பேர் பாதிப்பு

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் வான் கதவுகள் திறக்கப்பட்டமை மற்றும் வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 11586 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார். தெதுரு ஓயா, ராஜாங்கனை, இகினிமிட்டிய, அங்கமுவ, தப்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும், கடும் மழை... Read more »

நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி... Read more »