கடந்த 24 மணித்தியாலங்களில் 615 குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்..!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 537 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 78 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 615 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது 207 கிராம் 992 மில்லி... Read more »

கொழும்பு- வெள்ளவத்தை, பகுதியில் உள்ள பிரதான வீதியில் பாரிய குழி

கொழும்பு- வெள்ளவத்தை, பகுதியில் உள்ள பிரதான வீதியில் பாரிய குழியொன்று தோன்றியுள்ளது. வீதியின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக இந்த குழி தோன்றியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அப்பகுதி பாதுகாப்பு நோக்கங்களுக்காக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு சற்று வாகன நெரிசல் காணப்படுகின்றது. இதன் காரணமாக வெள்ளவத்தை பகுதியிலிருந்து... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு..!

நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி பால் மா, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு இன்று... Read more »

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம் – மனநலம் கடுமையாக பாதிப்படையும் அபாயம்..!

வெப்பமான காலநிலை காரணமாக மனநலமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நாட்களில் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மனநல கற்கைகள் பிரிவின் தலைவர் சிந்தக சந்திரகுமார தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக... Read more »

முருகனுக்கு கடவுச் சீட்டு வேண்டும்…! நீதிமன்றை நாடிய நளினி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நளினி தனது கணவர் முருகன் இலங்கை தூதரகம் சென்று வர அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரித்தானியா சென்று அங்கு தனது மகளுடன் வாழ கடவுச்சீட்டு... Read more »

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர். சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

வாளுடன் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது!

தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி வாளை எடுத்துச் சென்ற தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கதிர்காமம் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த... Read more »

எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி 2023 ஆம் ஆண்டில் 700 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 13 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக... Read more »

மீண்டும் உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலை!

நாட்டில் கடந்த சில தினங்களாக குறைவடைந்திருந்த மரக்கறிகளின் விலை, இன்று மீண்டும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நுவரெலியா உருளைக்கிழங்கு  ஒரு கிலோ  370 ரூபாய் முதல் 380 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இந்திய உருளைக்கிழங்கு  ஒரு கிலோ 185 ரூபாய் முதல் 200... Read more »

மீன்பிடிப்பதற்காக மூவருடன் சென்ற படகு மாயம்!

மீன்பிடிப்பதற்காக கற்பிட்டி கடலில் இருந்து புறப்பட்ட படகொன்று மீண்டும் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். ஈச்சங்காடு பிரதேசத்தை சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூவர் இந்த படகில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.... Read more »