பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு…!

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கருத்து தெரிவிக்கையில், கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.... Read more »

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.... Read more »

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல்…! யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது., வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசினால் 3... Read more »

யார் என்ன சொன்னாலும் இஸ்ரேல் நாட்டுக்கு வேலையாட்களை அனுப்புவதை நிறுத்த மாட்டோம்!

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சில அரசியல் குழுக்கள், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் இலங்கை... Read more »

இன்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை..!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல்,... Read more »

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று(15) விஜயம் செய்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று(15) விஜயம் செய்துள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணம் மானிப்பாயில் அமைந்துள்ள கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அமெரிக்கத் தூதுவர்  இன்று மாலை விஜயம்  மேற்கொண்டிருந்தார். இதன்போது வைத்தியசாலை செயற்பாடுகளை பார்வையிட்ட அமெரிக்கத் தூதுவர், வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடலிலும்... Read more »

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ(Robert Fico) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ(Robert Fico) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரத்தில் உள்ள கலாச்சார மாளிகைக்கு வெளியேஇடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த... Read more »

கட்டைக்காட்டு கடற்பரப்பில் 18பேர் கடற்படையால் கைது

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இன்றைய தினம் 15.05.20 24 வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பில் 18பேர் கைது செய்யப்பட்டனர். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி முறைகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களால் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வெற்றிலைக்கேணி கடற்படையினர் கடற்பரப்பில் மேற்கொண்ட... Read more »

சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த நால்வர் கைது

வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் அட்டைகளை பிடித்த நான்கு நபர்கள் இரண்டு படகுகளுடன் இன்று 15.05.2024 கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத தொழில் முறைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்துவருகின்றனர் இந்த நடவடிக்கையின்... Read more »

வடக்கு கிழக்கில் தனி ஈழம் – முயற்சி வெற்றிபெறும்…! சரத் வீரசேகர

தமிழர்களுக்கு எதிராகவே வடக்கு கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.... Read more »