மகளிர் தினத்தினை கொண்டாடும் முகமாக கொமர்சல் வங்கியின் “அனகி” செயற்றிட்டத்திற்கு அமைய நேற்றைய தினம் 18/03/2024 பெண்களுக்கான இலவசமாக மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது. திருநெல்வேலி கொமர்சல் வங்கி முகாமையாளரின் நெறிப்படுத்தலில் ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இலவச மருத்துவ பரிசோதனையின்போது குருதி அமுக்கம், உடற்றிணிவு சுட்டெண்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எழுதிய நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை, வாசிக்க விரும்பவும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், என்னிடம் அந்த நூல் இல்லை. கோட்டாபய அந்த... Read more »
‘பாடசாலை விடுமுறை காலத்தை வினைத்திறன் மிக்கதாய் களிப்பதற்குரிய வழிகாட்டல்’ என்ற தலைப்பில் கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2024 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதற்கட்ட விடுமுறை 2024 மார்ச் 08 முதல்... Read more »
தமிழ்ச் சமூகத்தை வழிநடத்தத் தீர்க்கதரிசனமும் ஆளுமையும் கொண்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தேசியத் தலைமை இன்று இல்லாமையால் சகல துறைகளுமே தகுந்த தலைமைத்துவங்கள் இன்றித் தள்ளாடுவதாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள்... Read more »
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து வேறானதொரு அரச தொழில் முயற்சியாண்மையாக நிறுவ அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள ஒரேயொரு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமான... Read more »
பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்குமாறு கோரி யாழ்.பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 11.03.2024 மற்றும் 18.03.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதங்களின் பிரகாரம் 19.03.2024 முழுநாளும்... Read more »
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்திய ஆயுதம் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதிநிதியும், மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைவருமான அலெக்ஸாண்டர் புரோவ் (Aleksandr Burov), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(19) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது சர்வதேச... Read more »
பிரித்தானியாவுக்கு சென்று ஐந்து மாதங்களில் உயிரிழந்த முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் .! திருமணம் செய்து இரண்டு வருடமான நிலையில் பிரித்தானியாவுக்கு கணவரிடம் சென்று ஐந்து மாதங்களில் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம்பெரும்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது... Read more »
கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில், மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையை காட்டிலும் அதிகரித்து பதிவாகக் கூடும் என அந்த... Read more »
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் Km 45.2R மற்றும் 45.3R தூண்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மத்தளையில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வானொன்று அதே திசையில் பயணித்த... Read more »