யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாதியர் மற்றும் காவலாளிகளின் அடாவடி நடவடிக்கை – சேவை பெற விரும்பாத மக்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாதியர் மற்றும் காவலாளிகளின் அடாவடி நடவடிக்கைகளால் தான் யாழ்ப்பாண மக்கள் வைத்தியசாலையூடாக சேவைகளைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையுள்ளது என வேலணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்  சுவாமிநாதன் பிரகலாதன் தெரிவித்தார். காய்ச்சல் காரணமாக வைசாளினி என்ற சிறுமி யாழ்ப்பாணம்... Read more »

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம் – சர்வதேச கண்காணிப்பின்றி அகழ்வு முன்னெடுக்கப்படுவதில் திருப்தியில்லை – ரவிகரன்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம், சர்வதேச கண்காணிப்பின்றி இடம்பெறுவது திருப்தி அளிக்கவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த அகழ்வுப் பணியில் தொல்லியல் துறையினர் மீதும் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.... Read more »

தகவல் அறியும் உரிமை சட்டத்தினை உதாசீனம் செய்த மடு கல்வி வலய பணிப்பாளர் விசாரணைக்கு அழைப்பு.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மடு வலய கல்வி பணிமனை தொடர்பில் கோரப்பட்ட தகவல் கோரிக்கைக்கு உரியவாறு பதில் வழங்காத மடு வலய கல்வி பணிப்பாளர் A.C வொலண்டைனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் விசாரணைக்கு ஆஜராகுமாறு மடு... Read more »

வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாகவே எனது பேர்த்தியின் கை அகற்றப்பட்டது – பேரன் கதறல்…!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாக எனது பேர்த்தியின் கையானது துண்டிக்கப்பட்டு விட்டது என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் தந்தையார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றையதினம் (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

மீற்றர் வட்டி கொடுமையால் இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

மீற்றர் வட்டிக்கு பணம் பெற்று கடனில் சிக்கிய இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவமானது நேற்றைய தினம் (04) யாழ்ப்பாணம் – ஓட்டுமடத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு பணத்தினை பெற்றுள்ளார்.... Read more »

பண்ணையில் ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்றிரவு ஒரு தொகை  கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாண பொலிஸ்... Read more »

கல்வியங்காடு பழக்கடை வியாபாரி கடத்தல் – அதிரடியாக அறுவர் கைது!

நேற்றையதினம் (02) பட்டப்பகல் வேளையில் கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரி ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கடத்தல் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தீவிர விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், இன்று (03) அதிகாலை கடத்தப்பட்ட... Read more »

கல்வியங்காட்டில் பழ வியாபாரியை கடத்திய கும்பல் கோப்பாய் பொலிசாரால் கைது!

நேற்று காலை பட்டப்பகல் வேளையில் கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரி ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கடத்தல் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து இன்று அதிகாலை கடத்தப்பட்ட நபர் கிளிநொச்சி பகுதியில் மீட்கப்பட்டதோடு குறித்த கடத்தலுடன்... Read more »

அனுமதி பத்திரத்திற்கு முரணாக மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இரண்டு டிப்பர் வாகனங்கள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைப்பு..!

அனுமதி பத்திரத்திற்கு முரணாக மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இரண்டு டிப்பர் வாகனங்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை இவ்வாறு... Read more »

மாணவனின் காதில் அறைந்த ஆசிரியர் மீது விசாரணை முன்னெடுப்பு…!

வவுனியாவில் 10ஆம் தர மாணவன் மீது அதே பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார். வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் தரம்10 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது அதேபாடசாலையை... Read more »