திங்கட்கிழமை விடுமுறையா?

சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், மறுநாள் பொது விடுமுறை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பொது விடுமுறை வழங்கப்படாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (02) தெரிவித்துள்ளார். சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில்,... Read more »

நடிகர் விஜய்க்கு நாமல் வாழ்த்து-நாமலுடன் கைகோர்ப்பாரா விஜய்?

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஸ X தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சி ஒன்றை... Read more »

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சோதனை நடவடிக்கைகளில் மேலும் 703 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 525 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 178 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 703 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 204 கிராம் ஹெராயின்,... Read more »

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வு

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு, இந்திய கலைஞர்கள் வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடனநிகழ்வு 01.02.2024 அன்று யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் ராகேஷ் நட்ராஜ்... Read more »

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தினை முற்றுகையிட்ட மக்கள் – பலப்படுத்தப்பட்ட பொலிஸாரின் பாதுகாப்பு 

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலத்தின் பிரதான வாயிலை பொதுமக்கள்  முற்றுகையிட்டமையினால் ஏற்பட்ட பதட்ட நிலமையினையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது திணைக்கள வாயிலின் முன்பாக இன்று  (02.02.2024) காலை இடம்பெற்ற இவ் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா குடிவரவு... Read more »

கொழும்பில் குவியும் சுற்றுலா பயணிகள்

தாமரைக் கோபுரத்தினை 50,000 வெளிநாட்டவர்கள் பார்வையிட்டுள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த 50ஆயிரமாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு நிர்வாகத்தினரால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கொழும்பு தாமரைக் கோபுரம் பொதுமக்கள் பாவனைக்காக... Read more »

குறையும் மழை-மக்களுக்கு மகிழ்ச்சி

இன்று முதல்(02.02.2024) மழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்வரும் 04.02.2024 மற்றும் 05.02.2024 களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. – நாகமுத்து பிரதீபராஜா- Read more »

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் அவதி 

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள்,  சிற்றூளியர்கள் , பாமசியாளர்கள் , தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்றும் 02.02.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை... Read more »

அளவுக்கு அதிகமான போதையில் வீதியில் விழுந்தவர் உயிரிழப்பு!

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார். இச்சம்பத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த சிவனடியான் சிவராசா (வயது 42) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்... Read more »

ஆனையிறவு விபத்தை ஏற்படுத்திய அரச பேருந்து சாரதிக்கு அதிக மதுபோதை – மேலும் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை  உயிரிழந்துள்ளார். இதன்போது கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் சதீஸ்குமார் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து... Read more »