தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து – இருவர் மரணம்

தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து குடிநீர் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று  வீதியில்... Read more »

மேய்ச்சல் தரையை மீட்கும் தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்கிறது

ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாக, தொடர்ச்சியாக... Read more »

மீண்டும் களமிறங்கும் தலைமறைவாகியிருந்த ஞானா அக்கா..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் ஆஸ்தான சோதிடரான ஞானா அக்கா எனும் பெண் மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விரட்டியடிக்கப்பட்ட பின்னர், ஞானா அக்காவுக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடு தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், சிறிது காலம் தலைமறைவாக இருந்தார்.... Read more »

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந் நிலைமையினால் சில பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்து... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதி  இன்றையதினம்(27)  சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  இன்றையதினம்(27)  சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில்-  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 304.99 முதல் ரூ. 305.23 மற்றும் ரூ. 315.62 முதல் ரூ. முறையே 315.87. கொமர்ஷல் வங்கியில்- ... Read more »

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவ டொலர் திரட்டும் இலங்கை அரசாங்கம்

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் டொலரை திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக காசாவில் உள்ள குழந்தைகளுக்கான நிதியத்தை உருவாக்கும் ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு இதற்கு பங்களிக்குமாறும் அமைச்சுக்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த உத்திக பிரேமரத்ன..!

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (செவ்வாய்கிழமை) சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உத்திக பிரேமரத்ன, 2020 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தமை... Read more »

தற்காலிகமாக மூடப்படவுள்ளது கோள் மண்டலம்…!

கொழும்பிலுள்ள கோள் மண்டலம் இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் உள்ளிட்ட காரணிகளால் கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மேலும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Read more »

சனல் 4 குற்றச்சாட்டு: விசாரணைகளுக்கு என்ன ஆனது? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னேற்றம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது நாடாளுமன்றுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் என்பதை... Read more »

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டே தீரும்! – சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது நீதியின் பக்கம் நிற்கும் எம்.பிக்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ம் தெரிவித்தார். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்... Read more »