பாடசாலை செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லை..! லொறியில் பயணித்தபோது நடந்த விபரீதம், 13 மாணவர்கள் காயம்.. |

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றிருந்த லொறியின் பின்பகுதி உடைந்து விழுந்ததில் 13 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்தசம்பவம் அனுராதபுரம் கலென்பிந்துணுவெவ பகுதியில் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றிருக்கின்றது. பாடசாலை செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறி ஒன்றில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது... Read more »

உரியவேளைக்கு உணவும், மருந்தும் கிடைக்காமல் முதியவர்கள் இறந்தால் யாழ்.மாவட்டத்திலுள்ள பொறுப்புவாய்ந்த அதிகாரிகளே அதற்கு காரணம்..!

யாழ்.கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்தின் பராமரிப்பிலுள்ள பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய், தந்தையர்கள் இறந்தால் யாழ்.மாவட்ட அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டுமென முதியோர் இல்ல  உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைதடியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளுக்காக சென்ற நிலையில் தமக்கு... Read more »

குழந்தைகளை ஆற்றில் வீசிவிட்டு தானும் குதித்த தாய்..! 5 வயது குழந்தை மரணம், காப்பாற்றப்பட்ட தாயும் உயிரிழந்த சோகம்… |

தனது இரு பிள்ளைகளையும் ஆற்றில் வீசிவிட்டு  தானும் ஆற்றில் குதித்த நிலையில் 5 வயதான பெண் குழந்தை உயிரிழந்ததுடன், தாயும் 11 வயதான மகனும் காப்பாற்றப்பட்டிருந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றய தினம் சந்திரிகா குளத்தில் இடம்பெற்றுள்ளது. தாய்... Read more »

யாழ் மாவட்ட விவசாய அறுவடைக்கு தேவையான மண்ணெண்ணையை பெற்று தருமாறு இந்திய உயர்ஸ்தானிகளிடம் அங்கஜன் கோரிக்கை!

யாழ் மாவட்ட விவசாய அறுவடைக்கு 1,655,202.84 லீற்றர் மண்ணெண்ணை தேவை : இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களிடம் அங்கஜன் இராமநாதன் விசேட கோரிக்கை. யாழ் மாவட்டத்தில் சிறுபோக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அறுவடையை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில், நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கான 1,655,202.84... Read more »

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா கும்பாபிசேக எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு மூன்றாம் திகதி ஆரம்பமாகிறது!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மன்னர் திரு கேதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்ப்பு வரும் ஆறாம் திகதிஇடம்பெற உள்ள நிலையில் எதிர்வரும் 3, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில், எண்ணைக் காப்பு    சாத்தும் நிகழ்வு இடம்பெற்று6 ம் திகதி வியாழக்கிழமை, மஹா... Read more »

மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிப்பு!

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க 2022 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி முதல் மேலும் ஆறு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து நந்தலால் வீரசிங்கவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது. Read more »

அச்சுவேலி- யாழ் தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாமையினால் மக்கள் வெகுவாக பாதிப்பு!

அச்சு வேலி யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாத காரணத்தினால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன. டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் போக்குவரத்து சேவையிலிருந்து... Read more »

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல்!

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் காத்திருந்தபோது பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. உடனடியாக யாழ் போதனா... Read more »

பலாலி- இந்தியா விமான சேவைகள் ஆரம்பிக்காததற்கு இந்தியாவே காரணம். அமைச்சர் டக்ளஸ் பல்ரி!

பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்காததற்கு இந்தியாவே காரணம் என கடல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இன்றைய தினம் காக்கை தீவில் புதிதாக அமைக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்... Read more »

ஊர்காவற்துறை கடலில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

இன்று ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்தபின்னர் கடலுக்கு செல்ல முற்பட்டவேளையே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த நபர் மரணித்த பின்னர் இன்னொரு மீனவர் அவ்விடத்திற்கு வந்து அவரது சடலத்தினை கண்டுள்ளார். இந்நிகழ்வில்... Read more »