மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரையில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு.

இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கத்திற்கமைய ஒழுங்கு செய்யப்பட்ட கடற்கரையோரங்களிலிருந்து பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் சிரமதானப் பணிகள் மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வழிநடத்தலில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலோடு இயற்கையைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேச இளைஞர் யுவதிகள்... Read more »

கல்முனையின் பல கிராமங்களில் காட்டு யானைகளின் அச்சம்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு, மருதமுனை, பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் கிராமங்களுக்குள் புகுந்து சுற்றுமதில் மற்றும் பயனுள்ள மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.பிரதேசத்தில் கடந்த ஒருவாரகாலமாக என்றுமில்லாத வகையில் தனியன் காட்டுயானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள்... Read more »

நிந்தவூரில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பது குறித்த கலந்துரையாடல்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை நிரந்தர தடுக்கும் வகையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒலுவில் துறைமுக அபிவிருத்தியின் பின்னர் படிப்படியாக அதிகரித்த கடலரிப்பு தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் உட்புகுந்துள்ளது. இந்நிலையில், கடலரிப்பை... Read more »

ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா.

கிழக்கு மாகாணத்தின் முதல் பெண்கள் பாடசாலையான ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா இடம்பெற்றது.பாடசாலை அதிபர் என்.எம். மஹாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையில் நவீன விசேட கல்வி அலகுகளான ஸ்மார்ட் வகுப்பு, தகவல் தொழினுட்ப பிரிவு, விவசாயப் பிரிவு... Read more »

புலம்பெயர் மக்கள் இலங்கை தமிழ் சினிமாவுக்கும் வழங்க முன்வரவேண்டும்….!ஈழக் கலைஞர்கள்.

புலம்பெயர் மக்கள் இந்தியா சினிமாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தினை இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ் சினிமாவுக்கும் வழங்க முன்வரவேண்டும் என இலங்கையில் உள்ள திரைப்படக்கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. Read more »

கொண்டயங்கேணி வாழைச்சேனை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய உற்சவம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கொண்டயங்கேணி வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தின் 6ஆவது வருடாந்த மஹோற்சவப் பெரு விழா நேற்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கறுவாக்கேனி ஆலகண்டி சிவன் ஆலயத்தில் விசேட பூசை ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து பாற்குடபவனியாக ஆலயத்தினை சென்று... Read more »

தலைக்கவசத்தால் தாக்கி ஒருவர் கொலை.

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்புவத்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜா எல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பெண் ஒருவர் நடத்தும் ஹோட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் உணவு வாங்கி பணம் கொடுத்த... Read more »

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு….!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என்றும் இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ... Read more »

நாளை முதல் பேருந்து சேவை 50 சதவீதமாக குறைப்பு.

முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.எனவே நாளை முதல் பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் இலங்கை... Read more »

பாகிஸ்தான் வௌ்ளப்பெருக்கில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலி!

பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால், பல்வேறு சம்பங்களில் 1,293... Read more »