பாடசாலை மாணவர்களிடையே இரகசியமாக இடம்பெறும் மோசமான செயல்….!

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில்,போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, மாணவர்கள் வீட்டில் பணம்... Read more »

வடமாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகளுக்கு எதிராக போராட்டம்

வடமாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மைகளை சுட்டிக்காட்டியும் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. பாடசாலை நிறைவடைந்த பின்னர் நேற்று(14) பிற்பகல் 2 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. ஆளுநர்... Read more »

சிறீதரன் எம்.பியின் காரியாலயத்தில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு வணக்க  நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயமான அறிவகத்தில் நேற்று நடைபெற்றது. கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் கலைவாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்... Read more »

காயமடைந்தவர்களை ஏற்றச்சென்ற அம்புலன்ஸ் மீதும் தாக்குதல் -யாழில் சம்பவம்

யாழ்.பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவா்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிா்காப்பு பணியாளா்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல்... Read more »

முல்லைத்தீவில் கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்ணாப்பிலவு மற்றும் கள்ளப்பாட்டு ஆகிய பகுதிகளில் வாழ்வாதரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்குமாறு கோரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்ணாப்பிலவு மற்றும் கள்ளப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கால்நடைகள் கடத்தும் செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவற்றை உடனடியாக... Read more »

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் ஆரம்பம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நாளை மறுதினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பல வகையான எரிபொருள் உற்பத்தியும் ஆரம்பிக்கப்படுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக... Read more »

நாளொன்றுக்கு ஐவர் போதைக்கு அடிமையாகின்றனர்

நாட்டில் நாளொன்றுக்கு ஐவர் போதைப்பொருளுக்கு அடிமையாவதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அம்பலாங்கொட பொல்வத்த பிரதேசத்தில் இன்று காலி பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே... Read more »

நாமல் ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை

கோட்டா கோ கம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கின் மற்றொரு சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத்... Read more »

வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களை உள்ளடக்கியதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஜனவரி 25, 2023 வரை வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு 60 வயது கட்டாய... Read more »

மின்சாரம் தாக்கி சிறுவன் மரணம்!

முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான். மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 17 அகவையுடைய இளைஞன், குடும்ப கஷ்டம் காரணமாக விசுவமடு 10 ஆம் கட்டைப்பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடைஒன்றில் வேலைசெய்துவந்தார். தொழில் கருவிக்கு... Read more »