கொக்கட்டிச்சோலையில் 47 வயது பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் கடந்த 22 ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் எனவே இவர் தொடர்பாகன தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய... Read more »

வியட்நாமில் இருந்து நாட்டை வந்தடைந்த 151 இலங்கையர்கள்

வியட்நாமிலிருந்து இலங்கையர்கள், நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்களே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள் நேற்று இரவு விசேட விமானம்... Read more »

மீண்டும் இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை

பொருளாதார நெருக்கடியால் இலங்கைக்கான பயணத்தை தவிர்த்த சுற்றுலா பயணிகள் அண்மைக்காலமாக நாடு ஓரளவு ஸ்திரமான நிலையை நோக்கி நகர்வதையடுத்து தற்போது வருகை தர ஆரம்பித்துள்ளனர். அதன்படி, 2022 டிசம்பர் 26ஆம் திகதி வரையில் 701,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி... Read more »

ஜனாதிபதியின் பங்கு பற்றுதலோடு 75 வது சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெறவுள்ளது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார், 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதி... Read more »

தினேஸ் ஷாப்டர் மரணம்: மனைவி,மாமியாரிடம் மீண்டும் வாக்குமூலம்!

பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டர், பொரளை மயானத்திலிருந்து மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மூளைச் சாவடைந்து காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தினேஸ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் விசாரணைப்பிரிவு தொடர் விசாரணைகளை முன்னெடுத்து... Read more »

ருமேனிய எல்லையில் இலங்கையர்கள் உள்ளிட்ட 27 பேர் கைது!

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு பரவூர்திகளில் மறைந்திருந்தவர்களே இவ்வாாறு கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு பரவூர்தியை சோதனை செய்த போது 17 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் அதில்... Read more »

சமூக வலைத்தளங்கள் ஊடாக வீசா மோசடி!

வட்ஸ்அப், தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் வீசா மோசடி தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமது வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தாது என குறிப்பிட்டுள்ளது. வேலை... Read more »

ஜஸ் போதை பொருள் வைத்திருந்த 70 வயதுடைய ஒருவருக்கு ஒருவருட சிறை 10 ஆயிரம் ரூபா அபராதம் – அக்கரைப்பற்று நீதிமன்றம் தீர்ப்பு

ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த  குற்றச்சாம்டில் கைது செய்யப்பட்ட  70 வயதுடைய ஒருருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்து 10 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா நேற்று செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை... Read more »

தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் கூட்டணி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: சம்பந்தன்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய... Read more »

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!9 பேர் மரணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது  இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுவதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ, கேதீஸ்வரன் தெரிவித்தார் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார், கடந்த இரண்டு வருடங்களாக கோவிட்... Read more »