அமரர் க.வைத்திலிங்கம் நினைவு நாளில் பாடசாலைக்கு உதவி…..!

கண்டி வீதி கொடிகாமமத்தை சேர்ந்த அமரர் க.வைத்திலிங்கம் அவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு  யா/ கொடிகாமம் அரசினர் வித்தியாலத்தில்   தரம் 5 க்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ப.தர்மபூவதி தலைமையில் இடம்பெற்ற... Read more »

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி தமது முடிவை அறிவிக்க இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாடு உறவுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்……! பா.உ கஜேந்திரகுமார்.

தமிழ் மக்கள் தமது முடிவை அறிவிக்கக் கூடிய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த தமிழக மக்கள் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று யாழ்ப்பாணம் நெல்லியடியில்... Read more »

புலோப்பளை கிழக்கில் வீடு எரிந்து நாசம் …..!

புலோப்பளை கிழக்கில் வீடு ஒன்று தீக்கிரையான சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தீ விபத்து சம்பவத்தில் வீட்டில் இருந்த சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த  சம்பவத்தில்  வீட்டிலிருந்த எவருக்கும்  எந்தவிதமான பாதிப்பும்  ஏற்படவில்லை  என பொலிசார் தெரிவித்தனர். வீடு எரிந்துகொண்டிருந்த... Read more »

யாழ் பொதுநூலக வீதிகள் காப்பெற்றாக மாற்றம்.முதல்வர் நேரில் மேற்பார்வை…..!

யாழ்ப்பாண பொது நூலகத்தின் உள்ளக வீதிகளை காப்பட் வீதிகளாக தரம் உயர்த்தும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சாதாரண தார் வீதியாக இருந்த குறித்த வீதியே காப்பெற் வீதியாக மாற்றப்படுகின்றன. காப்பெற் இடும் பணிகளை மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். Read more »

வட மாகாணத்தில் தீவிரமடையும் கொரோனா அபாயம்..! சுகாதார துறை எச்சரிக்கை…..!

வடமாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தொிவிக்கின்றன. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி தென்னிலங்கை சென்று திரும்பும் பலருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படுவதாகவும் சுகாதாரத்துறை கூறுகிறது. யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.... Read more »

கைதான 55 இந்திய மீனவர்களும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதான 55 இந்திய மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு... Read more »

பொலிஸ் சிரேஸ்ட ஊடக பேச்சாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் நியமனம்..!

பொலிஸ் சிரேஸ்ட ஊடக பேச்சாளராக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீளவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு, மாவட்ட போக்குவரத்து மற்றும் சுற்றுலா பிரிவு ஆகியவற்றிற்கான. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக அஜித் ரோஹன... Read more »

தயா மாஸ்டருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டணை! வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு.. |

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடக பேச்சாளரான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், தடைசெய்யப்பட்ட அமைப்பான தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுடன்... Read more »

தறிகெட்டு ஓடிய மருத்துவர்கள் பயணம் செய்த கார்..! வீட்டு மதிலை மோதிதள்ளி தலைகீழாக கவிழ்ந்து விபத்து.. |

யாழ்.அரியாலை – மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீட்டு மதிலை மோதித் தள்ளியதுடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது, இது குறித்து அங்கிருந்த மக்கள் கூறுகையில், கட்டுப்பாட்டை இழந்து கார் வீட்டு மதில்... Read more »

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை! யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று உயர்மட்ட கலந்துரையாடல்.. |

யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மைய நாட்களில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தொிவித்திருக்கின்றன. இந்நிலையில் வைத்தியசாலையில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read more »