யாழ் பொதுநூலக வீதிகள் காப்பெற்றாக மாற்றம்.முதல்வர் நேரில் மேற்பார்வை…..!

யாழ்ப்பாண பொது நூலகத்தின் உள்ளக வீதிகளை காப்பட் வீதிகளாக தரம் உயர்த்தும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சாதாரண தார் வீதியாக இருந்த குறித்த வீதியே காப்பெற் வீதியாக மாற்றப்படுகின்றன. காப்பெற் இடும் பணிகளை மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். Read more »

வட மாகாணத்தில் தீவிரமடையும் கொரோனா அபாயம்..! சுகாதார துறை எச்சரிக்கை…..!

வடமாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தொிவிக்கின்றன. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி தென்னிலங்கை சென்று திரும்பும் பலருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படுவதாகவும் சுகாதாரத்துறை கூறுகிறது. யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.... Read more »

கைதான 55 இந்திய மீனவர்களும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதான 55 இந்திய மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு... Read more »

பொலிஸ் சிரேஸ்ட ஊடக பேச்சாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் நியமனம்..!

பொலிஸ் சிரேஸ்ட ஊடக பேச்சாளராக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீளவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு, மாவட்ட போக்குவரத்து மற்றும் சுற்றுலா பிரிவு ஆகியவற்றிற்கான. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக அஜித் ரோஹன... Read more »

தயா மாஸ்டருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டணை! வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு.. |

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடக பேச்சாளரான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், தடைசெய்யப்பட்ட அமைப்பான தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுடன்... Read more »

தறிகெட்டு ஓடிய மருத்துவர்கள் பயணம் செய்த கார்..! வீட்டு மதிலை மோதிதள்ளி தலைகீழாக கவிழ்ந்து விபத்து.. |

யாழ்.அரியாலை – மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீட்டு மதிலை மோதித் தள்ளியதுடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது, இது குறித்து அங்கிருந்த மக்கள் கூறுகையில், கட்டுப்பாட்டை இழந்து கார் வீட்டு மதில்... Read more »

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை! யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று உயர்மட்ட கலந்துரையாடல்.. |

யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மைய நாட்களில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தொிவித்திருக்கின்றன. இந்நிலையில் வைத்தியசாலையில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read more »

பூஸ்டர் தடுப்பூசி பெறாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்வு..!

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி பெறாமல் உள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்துவருவதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி அன்வர் ஹம்தான கூறினார். மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள்... Read more »

யாழ்.கொக்குவில் – நந்தாவில் பகுதியில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..! வாகனங்கள் தீக்கிரை, வீடு சேதம்.. |

யாழ்.கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களை அடித்து நொருக்கி, தீ வைத்துக் கொழுத்தி அட்டகாசம் புரிந்துள்ளது. நேற்றய தினம் இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »

யாழ்.மானிப்பாயில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வாள்கள், கோடரிகள் மீட்பு..!

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்து வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர். குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸாரினால் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 2... Read more »