பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட 2 உழவு இயந்திரங்கள் மின்வெட்டு நேரத்தில் காணாமல்போய்விட்டதாம்!

மணல் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரு உழவு இயந்திரங்கள் காணாமல்போயுள்ளன. முல்லைத்தீவு – பறங்கி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்காரர்களினால் மணல் அகழப்பட்ட நிலையில் கடந்த 25ம் திகதி இரு உழவு இயந்திரங்களை பொலிஸார் மீட்டனர். குறித்த இரு உழவு இயந்திரங்களும்... Read more »

இன்றும் சுழற்சி முறையிலான நீண்டநேர மின்வெட்டு தொடரும்!

நாடு முழுவதும் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும்,  மாலை 6 மணிமுதல் இரவு... Read more »

யாழ்.மீசாலை – அல்லாரை பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினால் இளைஞன் கைது..!

யாழ்.மீசாலை – அல்லாரை பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் இராணுவ புலனாய்வு பிரிவினால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அல்லாரைப் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல்... Read more »

தமிழ் மக்களது காணிகளை அபகரிக்க மாட்டோம் ஜனாதிபதி, ஆனால் நாளை வனஜீவராஜிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கு அம்பனில் காணி அபகரிப்பு முயற்சி,…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில்  வனஜீவராசிகள்  திணைக்களத்தினரால் நாலை காணிகள் அபகரிக்கும் முயற்சி ஏற்பாடாகியுள்ளது. அது தொடர்பில்  அம்பன் கிராம சேவகரால் அம்பன் மக்களை காலை 9:30 மணிக்கு தமது காணிகளுக்கான உறுதிகளுடன் சமுகமளிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சேவகரால்  அறிவிக்கப்பட்ட விடயம் ... Read more »

யாழ் கொடிகாமம் அரசினர் வித்தியாலய மாணவர்களுக்கு உதவி….!

ஜேர்மனியில் வசிக்கும் கருணாகரன் விதுஷனின் நிதி பங்களிப்பில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும் இலங்கை முதலுதவி சஙக தேசிய கண்காணிப்பாளருமான வை.ஜெகதாசினால் கொடிகாமம் அரசினர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை அதிபர் ப.தர்மபூவதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்   கிராம... Read more »

வடகிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா – எம்.ஏ.சுமந்திரன் இடையில் பேச்சு.. |

வடகிழக்கு மாகாணங்களில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்புக்கள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் – இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இடையே தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி – தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையிலான சந்திப்பின்போது வடகிழக்கில்... Read more »

யாழ்.மாவட்ட மக்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..!

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் இந்தவாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர். எனவே டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்காமல் தடுப்பதற்கு ஒவ்வொரு குடியிருப்பாளர்களும், தமது குடியிருப்புக்கள் மற்றும் காணிகளை துப்புரவாக... Read more »

யாழ்.உடுவிலில் வீடு புகுந்து வயோதிபர் மீது வாள்வெட்டு..!

யாழ்.உடுவில் தெற்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டு குழு வீட்டுக்குள் புகுந்து வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. இதனால் இடது கையில் வாள்வெட்டுக்கு இலக்கான... Read more »

கறுப்பு சந்தையாக மாறியுள்ள யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்கள்..! நிறுத்துமாறு வந்த உயர்மட்ட உத்தரவுகளும் உதாசீனம்… |

பிரதேச செயலகங்களில் வைத்து சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கவேண்டாம். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் அறிவுறுத்திய பின்னரும் சில பிரதேச செயலகங்களில் வைத்து சமையல் எரிவாயு விநியோகம் நேற்றய தினமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் எரிவாயு விநியோக நிறுவனம் ஒன்று நகர்பகுதியில் உள்ள தனது... Read more »

பொலிஸ் உத்தியோகஸ்த்தருடைய வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டு குழு அட்டூழியம்! 4 பேர் படுகாயம்.. |

யாழ்.கோண்டாவில் பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் வீட்டுக்குள் நுழைந்து வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்  கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற மரணச்... Read more »