வடக்கு அபிவிருத்திக்கு ஆந்திரா தெலுங்கானா தொழில்நுட்ப வல்லுநர்களை சந்தித்த வடக்கு ஆளுநர்….!

இந்தியா சென்ற வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்றைய தினம்  புதன்கிழமை ஆந்திரா மற்றும் தெலுங்கானா தொழில்நுட்ப வல்லுனர்களை தமிழ்நாட்டில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது வடக்கு அபிவிருத்தியை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் அனுபவங்களை பகிர்வது தொடர்பில் தொழில்நுட்ப... Read more »

காரைநகரில் கள்ளுத் தவறணையில் நடந்த கோஷ்டி மோதல்..! கத்திக்குத்துக்கு இலக்கான 28 வயது இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி.. |

யாழ்.காரைநகர் – கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதியில் உள்ள தவறணை ஒன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.சுழிபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.... Read more »

யாழ்ப்பாணத்தில் 20 வயது இளைஞன் 12 கோடியே 23 லட்சம் பெறுமதியான 492 கிலோ கஞ்சாவுடன் கைது..!

சாவற்கட்டு பகுதியில் நேற்றய தினம் இரவு நடத்தப்பட்ட கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின்போது 20 வயது இளைஞன் 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான 492 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கடல் மார்க்கமாக கொண்டுவரப்படும்  போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பரந்தளவிலான சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கடற்படையினர்... Read more »

யாழ்.ஊரெழுவில் 3 வயது குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

யாழ்.ஊரெழுவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல்போயிருந்த 3 வயது குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஊரெழு மேற்கில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் இரட்டை சகோதரர்களான 3 வயது குழந்தைகள் ஊஞ்சலில் விளையாடியுள்ளனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தாய்... Read more »

திடீர் காய்ச்சலால் 11 மாத குழந்தை உயிரிழப்பு..!

திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியாலைக்கு கொண்டுவரப்பட்ட 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்.கொடிகாமம் – தவசிகுளத்தை சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற 11 மாத ஆண் குழுந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்றய தினம் காலை குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் பனடோல்... Read more »

காலிமுகத்திடலில் ஊடகவியலாளரால் இசைப்பிரியாவின் உருவப்படத்தையும் தாங்கி நினைவு கூரல்…..!

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளர்/ ஊடகவியலாளர் இசைப்பிரியா (ஷோபனா தர்மராஜா) நேற்று காலிமுகத்திடலில் நினைவுக்கூரப்பட்டார். இராணுவத்தினரால் பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட இசைப்பிரியாவின் 40வது பிறந்தநாள் நேற்றாகும். அவரது புகைப்படம் தாங்கி நீதி கேட்கும் பதாதையுடன் நிற்பவர் ஒரு ஊடகவியலாளர். Read more »

அழுத்தங்களுக்கு அடிபணிவதா? அப்படி ஒன்று நடக்கவே நடக்காது, பிரதமர் மஹிந்த காட்டமாம்.. |

அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகும் தீர்மானமே தம்மிடம் இல்லை. என கூறியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க தயார் எனவும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில்... Read more »

யாழ்.கல்வியங்காடு பகுதியில் 47 வயதான குடும்பஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு..!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் வீடொன்றின் முன்பாக 47 வயதான குடும்பஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்தபோது அங்கு 2... Read more »

நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி…!

மொரட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவ சங்கத்தினுடைய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது பத்தரமுல்லையில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இன்று பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... Read more »

தாழ்வுப்பாடு கடலில் வைத்து 12 பேர் கடற்படையினரால் கைது! –

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக, இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக 14 பேரை, தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலையை சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள், மன்னாரைச் சேர்ந்த... Read more »