யாழ்.கல்வியங்காடு பகுதியில் 47 வயதான குடும்பஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு..!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் வீடொன்றின் முன்பாக 47 வயதான குடும்பஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.

வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்தபோது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர்

வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தனர்.

கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews