புகையிரத ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு!

புகையிரத ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பயணச்சீட்டு வழங்கும்பணியை இடைநிறுத்தி மேற்கொண்டுள்ள போராட்டத்திற்குகு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவையாளர்களின் பதவி உயர்வு, புகையிரதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு உள்ளிட்ட 20 இற்கு மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

இதேவேளை புகையிரதசேவைகள் வழமைபோல இடம்பெற்றுவருவதுடன், பயணிகள் பயணிச்சீட்டு இல்லாமல் பயணித்துவருவதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Recommended For You

About the Author: admin