குத்துச்சண்டை மேடை, குத்துச்சண்டை பயிற்சி அரங்கு திறப்பு!

கொழும்பு அமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 1982ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் அனுசரணையுடன்
குத்துச்சண்டை மேடையும் குத்துச்சண்டை பயிற்சி அரங்கு நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் செஸ் மற்றும் கரம் விளையாட்டுக்களுக்கான விளையாட்டு அறையும் இதன்போது திறக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் அதிபர் மற்றும் உப அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 1982ஆம் ஆண்டு பழைய மாணவ பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Recommended For You

About the Author: admin