பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

மெதிரிகிரியவில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மெதிரிகிரிய பொலிஸ் நிலையத்தில் பதிவான மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 25 வயதுடைய அதேபகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவருக்கு எதிராக ஹிகுரக்கொட நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin