கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு! |

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கடற்படையினால் கைதான இந்திய மீனவர்கள் 43 பேரையும் எதிர்வரும் 31ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. 

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தபட்டனர்.

இதன்போது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews