கொடிகாமம் – கச்சாயில் பாலியல் தொந்தரவு! சந்தேகநரை தேடும் பொலிஸார்.. |

யாழ்.கொடிகாமம் – கச்சாய் பகுதியில் வசித்துவரும் குடும்ப பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவிக்கப்படும் நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த குடும்ப பெண்ணின் கணவரும், பிள்ளைகளும் வெளியில் சென்றிருந்தவேளை அயல் வீட்டிலிருந்த குடும்ப தலைவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று முரண்பட்டுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக குடும்ப தலைவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews