அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான பிக்கப் வாகனம் விபத்து.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை வீதியினூடாக பயணம் செய்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் பிக்கப் வாகனம் வீதியை விட்டு விலகி இன்று விபத்துக்குள்ளானது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான பிக்கப் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தின் போது வாகனத்தில் பயணம் செய்திருந்ததாக கூறப்படும் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் உட்பட இருவர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் வாகனம் முற்று முழுதாக சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews