கரைச்சி பிரதேச சபையில் கண்டன பிரேரனை நிறைவேற்றம்….!

(கிளிநொச்சி)

தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் போதைவஸ்து கடத்தியவர் என்று  கூறிய வார்த்தைக்கு இன்று கரைச்சி பிரதேச சபையில் கண்டன பிரேரனை முன்  வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் பாராளுமன்ற அமர்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் போதைவஸ்து கடத்தியவர் என்றும் விற்பனையில் ஈடுபட்டவர் என்றும் கூறிய வார்த்தைக்கு எதிராக இன்று ஐக்கிய தேசிய கட்சியின்  கரைச்சி பிரதேச சபையில் இன்று (08)கறுப்பு கொடி காட்சிப்படுத்தி கண்டன பிரேரனை ஒன்று முன் வைத்திருந்தனர்.

குறித்த பிரேரனையில் பல கட்சி சார்ந்தவர்களும் ஆதரவளித்திருந்தனர். அமைச்சர் கூறிய அந்த வார்த்தைக்கு மக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.இதனடிப்படையில் குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews