இலங்கையிடம் மன்னிப்பு கோருமா பாகிஸ்தான் – கடும் கண்டனங்கள் வெளியீடு.

பிரியந்த குமார கொலை தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் தெரிவித்த கருத்துக்கு இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்  சரத் வீரசேகர கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் பிரியந்த குமார தியவட்டன என்ற இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், குறித்த கருத்துக்கள் உண்மையாகவிருந்தால் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews