முல்லைத்தீவில் மழை காரணமாக 110 குடும்பங்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில், தொடர்ச்சியான அடை மழை காரணமாக, 110 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலாளர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
அடை மழை காரணமாக, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய் மாந்தை கிழக்கு, வெலி ஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கிய வகையில், 110 குடும்பங்களை சேர்ந்த 326 பேர், வெள்ளத்தினால், பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
23 சிறிய குளங்களும், 15 இடைத்தர நீர்ப்பாசன குளங்கள் வான் பாய்ந்து வருவதாகவும், மாவட்ட செயளாலர் க.விமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews