வவுனியா செட்டியூர்குளம் உடைப்பெடுத்தது!

சுமார் 50 ஏக்கரில், குளத்தை நம்பி விவசாயம் செய்யப்படும் நிலையில், குளம் உடைப்பெடுத்தமை, விவிசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கமக்காரர் அமைப்பின் நிதியில் இருந்து, உடைப்பெடுத்த பகுதியை செப்பனிடுவதாக குறிப்பிடும் விவசாயிகள், குளத்தில், வேறு பகுதிகளிலும் உடைப்பெடுக்கும் நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில், இராணுவத்தினரும் சென்று, குளம் செப்பனிடல் பணியை பார்வையிட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews