குடும்ப தகராறில் மனைவி உயிரிழப்பு! மனைவியை தீவைத்து கொழுத்திய சந்தேகத்தில் கணவன் கைது, யாழ்.பருத்தித்துறையில் சம்பவம்.. |

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை – திக்கம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பரமநாதன் சசிகலா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 13ம் திகதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் மனைவியுடன் தகராறு புரிந்துள்ளார்.

இதனையடுத்து மண்ணெண்ணை தன் மீது ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் கணவன் தன்னிடமிருந்த லைற்றர் மூலம் பாவடையில் தீ வைத்ததை தொடர்ந்து மனைவி தீயில் எரிந்துள்ளார்.

அயலவர்கள் போராடி அவறை காப்பாற்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கணவனை கைது செய்த பொலிஸார்

விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews