யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில், இன்று அதிகாலை, வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வாள் மற்றும் கோடாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகளுக்கு, சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், ஏழு பேரை, வீட்டின் உரிமையாளர் அடையாளம் காண்பித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய கும்பல், பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய, பொலிஸார், தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews