வீட்டு வாசலில் நின்ற இளைஞன் மீது வாள்வெட்டு! காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில்.. |

யாழ்.ஏழாலை பகுதியில் வீட்டின் முன்னால் நின்ற இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. 

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் தனது வீட்டு வாசலில் நின்ற நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் இளைஞன் மீது சரமாரி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. 

தாக்குதலினால் இடது கையில் காயமடைந்த இளைஞன்  தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

மேலும் சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews