அதிகாலையில் வீடு புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு! |

யாழ்.பருத்தித்துறை – கரணவாய் மேற்கு அந்திரான் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 23 வயதான தே.பாலகுமார் என்பவரே படுகாயமடைந்துள்ளார். நள்ளிரவு அவரின் வீட்டுக்கு தலைக்கவசம் அணிந்து சென்ற மூவர் 

வீட்டாரை அச்சுறுத்தி விட்டு சென்றுள்ளனர். மீண்டும் அதிகாலை வந்தவர்கள் கதவினை உடைத்து உள்நுழைந்து இளைஞரை வெட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில்

நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews