கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுர் மரக்கறி வகைகளிற்கு கடும் கிராக்கி.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுர் மரக்கறி வகைகளிற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிரதான சந்தையான கிளிநொச்சி சேவை சந்தையில் உள்ளுர்  மரக்கரிவகைகளுக்கு கடும் கிராக்கி நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சந்தையில் விற்பனையாகும் மரக்கறிகளின் விலை அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் மரக்கறி வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதிக மழைவீழ்ச்சி, உரமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது மரக்கறிகளிற்கு கடும் கிராக்கி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews