காரைதீவில் பிரதேச காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம் முன்னெடுப்பு

காரைதீவு பிரதேச காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது மீன்பிடி பரிசோதனைக்குரிய காரியாலயம் மீன்பிடி திணைக்களத்திற்கு வழங்குதல், ஐஸ் தொழில் சாலையை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகள் முன்மொழியப்பட்டதுடன் அரச, தனியார் காணிகளில் உள்ள சிறிய முக்கியமான பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றை தீர்ப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், சேவை மேற்பார்வை அதிகாரி தட்சணாமூர்த்தி, பிரதேச காணிப்பயன்பாட்டு திட்டமிடல் காணி உத்தியோகத்தர் ஆர்.ரமேஸ், கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர், வனவள பாதுகாப்பு உத்தியோகத்தர்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கிராம நிலதாரிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews