சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த ஒக்ரோபர் மாதத்தில் 22,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது கடந்த செப்ரெம்பர் மாதத்தைக் காட்டிலும் 68 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10 மாத காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews