கல்முனையில் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தினால் ”அரண்” காலாண்டு சஞ்சிகை இன்று வெளியிடப்பட்டது. சஞ்சிகை வெளியீட்டு அறிமுக விழா கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் தலைமையில் இடம் பெற்றது.

சஞ்சிகை அறிமுக உரையை வைத்தியர் எம்.பி.ஏ.வாஜித்தும், விமர்சன உரையை முன்னாள் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸார், ஏற்புரை வைத்தியர் ஜ.எம்.முஜீப் ஆகியோரினால் முன் வைக்கப்பட்டது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்களின் பின்பு சஞ்சிகை வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews