நான் பௌத்த மதத்திற்கு எதிரானவனோ மதவாதியோ அல்ல! யாழ் மாநகர முதல்வர்.

நான்பௌத்த மதத்திற்கு எதிரானவன் அல்ல அல்லது நான் ஒரு மதவாதியும் அல்ல என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்

இன்று இடம்பெறுகிறயாழ் மாநகர சபை அமர்வில் நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்குஅனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் சபையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் ஒரு மதவாதி அல்ல அத்தோடு பௌத்த மதத்துக்கு எதிரானவும்அல்ல. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். ஆனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்ல என்னை மதவாதி என சித்தரிக்கும் வகையில் நாகவிகாரை விகாராதிபதியினால் யாழ் மாநகர முதல்வர் என எந்தவித மரியாதையும் வழங்காது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே என்னை தவறான புரிதலுடன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்கள் என தெரிவித்துள்ளதோடு. அப்பகுதி புனிதபிரதேசமாக இருக்க வேண்டும். நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் அந்த வகையில் நாம் எதிர்காலத்தில் அடையகூடிய தமிழ் தேசியத்தை ஒரு மதச் சார்பற்ற இடமாக அனைத்து மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற அல்லது தங்களுடைய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews