தமிழக மீனவர் ஈழத்தமிழ் மீனவர் முரண்பாடு போராட்டம் மூலம் தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல.( சி.அ.யோதிலிங்கம்).

இழுவைப் படகுகளுக்கு தடைகோரி கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
“முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை” கடல்வழிப் போராட்டம் இடம்
பெற்றது. சுமார் 100 வகையான படகுகளில் போராட்டக்காரர்கள் கடல் வழியாக
ஆர்ப்பாட்டத்தை நடாத்தினா.; பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்
தலைமையில் அவரது முன்னெடுப்பின் காரணமாகவே இப் போராட்டம் இடம்
பெற்றது. சுமார் 300 பேர் வரை கலந்து கொண்டனர் எனக் கூறப்படுகின்றது.
சுமந்திரன்ரூபவ் சாணக்கியன்ரூபவ் சிறீதரன் ஆகிய பாராளுமன்ற
உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி
சிறீஸ்கந்தராசாவும் ரூபவ் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன்ரூபவ்
சயந்தன் ரூபவ் சுகிர்தன் ரூபவ் சிவயோகன் ஆகியோரும் பல உள்ளுராட்சிமன்ற
உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் போராட்டத்தில் கலந்து
கொள்ளவில்லை குறிப்பாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாரூபவ் செயலாளர்
சத்தியலிங்கம் ரூபவ் சிவஞ்ஞானம்ரூபவ் சரவணபவன் போன்றோரும் கலந்து
கொள்ளவில்லை. பங்காளிக்கட்சிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. தங்களுக்கு
எந்தவித அழைப்பும் வழங்கப்படவில்லை என பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள்
கூறினர்.
சுமந்திரன் தமிழரசுக்கட்சியியுடனோ ரூபவ் பங்காளிக்கட்சிகளுடனோரூபவ்
எந்தவித கலந்துரையாடலையும் நடாத்தாமல் போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச்
செய்திருந்தார். பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. தனித்தனி அழைப்புக்கள்
தேவையற்றது என இக்குற்றச்சாட்டுக்களுக்கு சுமந்திரன் பதிலளித்துள்ளார்.
கலந்துரையாடி முடிவுக்கு வருவதென்றால் காலதாமதம் ஏற்படும் அதனாலேயே
கலந்துரையாடாமல் ஏற்பாடு செய்ததாக கூறியிருந்தார். கூட்டமைப்பின்
பேச்சாளர் என்ற பதவியிலிருப்பவர் சொந்தக்கட்சியுடனோ ரூபவ்

2

பங்காளிக்கட்சியுடனோரூபவ் கலந்துரையாடாமல் முடிவெடுப்பது எந்த வகை ஜனநாயகம்
என்பது சுமந்திரனுக்கே வெளிச்சம்.
இந்தப் போராட்ட விவகாரத்தில் சுமந்திரனின் அணுகுமுறை தொடர்பான
விமர்சனக்களுக்கப்பால் போராட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிராக உள்ளது
என்ற விமர்சனமே கடுமையாக முன்வைக்கப்பட்டுள்ளது. மறுவன்புலவு
சச்சிதானந்தனும் ரூபவ் காசி ஆனந்தனும் பிரதானமாக விமர்சனங்களை
முன்வைத்துள்ளனர். மறுவன்புலவு சச்சிதானந்தத்தின் விமர்சனம் சற்று கடுமையாக
இருந்தது எனக்கூறலாம்.
தமிழக மீனவர்களுக்கு எதிராக போராட்டத்தை நடாத்திக்கொண்டு இந்திய
உதவியை எந்த முகத்துடன் கேட்பீர் என அவர் கூறியிருக்கின்றார். இந்திய
கன்னியா குமாரிக்கு தெற்கே உள்ள குமரிப்பரப்பிலும்ரூபவ் அந்தமான்
தீவுகள் தொடக்கம் விசாக பட்டினம்ரூபவ் தூத்துக்குடி வரைக்கும் இலங்கை மீனவர்கள்
மீன்பிடித்து வருகின்றனர். தமிழக மீனவர்களோ தமிழக கரையோர
காவல்;படையோ அதனைத்தடைசெய்யவில்லை என்றும் கூறியிருக்கின்றார். தமிழக
மீனவர்கள் வடக்கின் பொருளாதாரத் தடையை முறியடிக்க உயிரைக் கையில்
பிடித்துக்கொண்டு உதவினர் என்றும்ரூபவ் அகதிகளாகச் சென்ற எம்மவர்களை தமிழக
மீனவர்கள் காத்தனர் என்றும்ரூபவ் மூன்றுலட்சம் பேருக்கும் இந்தியா புகலிடம்
கொடுத்தது என்றும் கூறியிருக்கின்றார். இந்தியாவை சீண்டியவாறே
இந்தியாவிடம் அரசியல் ஆதரவினை தமிழரசுக் கட்சி கேட்கின்றது என்றும்
அதனை எள்ளி நகையாடியிருக்கின்றார். ரூடவ்ழத் தமிழர் நட்புறவு மையத்தின்
தலைவர் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் தனது அறிக்கையில் இந்திய
அரசுக்கும் தமிழீழ மக்களுக்குமிடையில் உள்ள நட்புறவைச் சிதைக்கும் வகையில்
தமிழக மீனவர்களை தமிழீழ மீனவர்களுடன் மோதவிடும் சூழ்ச்சியில்
சிறீலங்கா அரசு இறங்கியுள்ளது என்றும் இதற்கு சுமந்திரன்
உதவியிருக்கின்றார் என்றும் கூறியிருக்கின்றார்.
சுமந்திரன் இப்போராட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிரானதல்ல.
இழுவைப்படகு தடை செய்வதற்கான போராட்டம் எனக் கூறினாலும் இழுவைப்படகு
தொழிலை இங்குள்ள மீனவர்களும் மேற்கொள்கின்றார்கள் என்ற நிலை
இருக்கின்ற போதும் போராட்டகாலம் ரூபவ் பாதிப்பின் தாக்கம் என்பவற்றை

3

பார்க்கும் போது இப்போராட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிரான
போராட்டமே என்பதில் சந்தேகமில்லை.
தமிழக மீனவர்களின் அத்துமீறல் பற்றி போர்க்காலத்திலும்
அதற்கு பின்னரும் என நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்றது.
விடுதலைப்புலிகள் கூட இவ்விவகாரத்தை எவ்வாறு கையாள்வது எனத்திணறியிருந்தனர்.
துரதிஸ்டவசமாக நீண்டகாலமாக நிலவி வரும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு
தகுந்த மூலோபாயங்கள் தந்திரோபாயங்களை வகுத்து தமிழ்த்தரப்பு
செயற்படவில்லை. இந்தப் போராட்டம் கூட தமிழ் அரசியல்வாதிகள் எவரும் தமது
பிரதேசத்திற்கு வரக்கூடாது என வடமராட்சி மீனவர்கள் போர்க்கோலம்
எழுப்பிய பின்னர் தான் இடம் பெற்றிருக்கின்றது. கிழக்கில் தமிழ் –
முஸ்லீம் முரண்பாடு தொடர்பாகவும் இந்த நிலை தான் ஏற்பட்டிருக்கின்றது.
தமிழ் அரசியல் தலைமை கண்டும் காணாமல் விடுகின்ற போது விவகாரம் முற்றி
மேல்நிலைக்கு வருகின்றது.
வடக்கு மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் உள்ள இந்த
முரண்பாடு தமிழத் தேசிய அரசியலைப் பொறுத்தவரை அக முரண்பாடே! அக
முரண்பாடுகளை புற முரண்பாடுகளை கையாள்வது போல கையாள முடியாது. அதனை
கவனமாகக் கையாண்டு தீர்க்க முன்வராவிட்டால் எதிரிகள் தமக்கு சாதகமாக
பயன்படுத்துவர் என்பது எதிர்பார்க்க வேண்டியதே! இது இம் முரண்பாட்டிற்கு
மட்டுமல்ல சாதிரூபவ் மதரூபவ் பிரதேசரூபவ் பால் முரண்பாடுகளுக்கும்ரூபவ் தமிழ்-
முஸ்லீம் முரண்பாட்டிற்கும் பொருந்தும்.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை எதிர்முனையான இரண்டு விவகாரங்கள்
களத்தில் உள்ளன. ஓன்று வடக்கு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இரண்டாவது ரூடவ்ழத்தமிழர் – தமிழகத் தமிழர் உறவு பாதிக்கப்படுகின்றது.
இதனைக் கையாளும்போது கத்தியின் கூர் விளிம்பில் நடப்பது போன்று
கவனமாகக் கையாள்வது அவசியம்.
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களினால் ரூடவ்ழத் தமிழ் மீனவர்கள்
கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கின்றனர். போர் நடந்த காலத்தில்
ரூடவ்ழத்தழிழ் மீனவர்களினால் தமது தொழிலைச் செய்ய முடியவில்லை. போர்

4

முடிந்த பின்னர் பல்வேறு கடன்களைப் பட்டே தொழிலை
மேற்கொள்கின்றனர். தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள்
மீன்வளங்கள் அழிப்பதோடு கடன்பட்டு தொழில் செய்யும் அவர்களது
வலைகளையும் அழித்துச் செல்கின்றது. வடமராட்சி மீனவர் ஒருவர்
விரக்தியினால் தனது அறுக்கப்பட்ட வலைகளை ஒன்று குவித்து தீமூட்டி
கொழுத்தி எரித்து இத்தொழிலே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்.
குறைந்தபட்சம் தமிழக் மீனவர்கள் தமது இழுவைப்படகு தொழிலை விட்டிருந்தால்
கூட ரூடவ்ழத் தமிழ் மீனவர்களுக்கு அது ஆறுதலாக இருந்திருக்கும்.

இந்த விவகாரத்தில் தமிழக மீனவர்களை ஒழுங்கபடுத்த வேண்டிய
பொறுப்பு தமிழக அரசியல் தலைமைகளுக்கும் தமிழக மீனவ தொழிற்சங்க
தலைமைகளுக்கும் உள்ளது. இந்தப் பொறுப்பை வினைத்திறனுடன் ஆற்ற
அவர்கள் முன்வரவில்லை. மறுபக்கத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழக
மீனவர்களின் அத்துமீறலைத்தடுப்பது பெரியகாரியமல்ல ஆனால்
அவர்கள் தமிழக மீனவர்களுக்கும் ரூபவ் ரூடவ்ழத்தமிழர் மீனவர்களுக்குமிடையே
முரண்பாட்டை ஊதிப்பெருப்பிக்க வேண்டும் என்பதற்காகவே
வாழவிருந்தனர்.

இரண்டாவது விடயம் தமிழக ரூபவ் ரூடவ்ழத்தமிழர் ரூபவ் உறவு
பாதிக்கப்படுவதாகும். தமிழத்தேசிய அரசியலைப் பொறுத்த வரை தமிழக
மக்கள் நிறந்த சேமிப்புச் சக்திகளாவர் தமிழ்த்தேசிய அரசியல்
முனைப்பொடு நகர வெண்டுமென்றால் தமிழக மக்களின் ஒத்தழைப்பு மிகவும்
அவசியம். ரூடவ்ழத் தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்த ஒரு தேசிய இனம். அது
தன்னுடைய அக ஆற்றலை மட்டும் வளர்த்துக்கொண்டு போராட்டத்தில்
வெற்றியடைய முடியாது. புற ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
புற ஆற்றலில் முக்கியமாக இருப்பவர்கள் தமிழகத் தமிழர்கள்ரூபவ் மலையகத்
தமிழர்கள் உட்பட உலகெங்கும் வாழும் தமிழக வம்சாவழித்தமிழர்களும்ரூபவ்
சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும்
முற்போக்கு ஜனநாயக சக்திகளுமே. இது பற்றி முன்னரும் இக்
கட்டுரையாளரினால் கூறப்பட்டிருக்கின்றது.

5

ரூடவ்ழத் தமிழர்களுக்கான தங்களது பொறுப்பை தமிழக மக்கள் தங்களால்
இயன்றவரை நிறைவேற்றியுள்ளனர் என்றே கூற வேண்டும். தமிழக
அரசியல் தலைமைகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம்.
ஆனால் தமிழக மக்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றியிருக்கின்றனர்.
ரூடவ்ழத் தமிழர்களுக்காக 27 பேர் வரை தீக்குளித்து இறந்துள்ளனர் என்பதை
நாம் மறக்கக் கூடாது. தமிழகத்தின் இன்றைய ஸ்ராலின் தலைமையிலான தி.மு.க
அரசு ரூடவ்ழத் தமிழர்கள் தொடர்பாக பல செயற்பாடுகளை முன்னெடுத்து
வருகின்றது. ரூடவ்ழத் தமிழர்களையும் இணைந்த வெளிநாடு வாழ்தமிழர் அமைச்சை
உருவாக்கியுள்ளது. இலங்கை அரசே ரூடவ்ழத்தமிழர்களுக்கு எனக்கூறி எந்த
நிதியையும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்காமல் இருக்கின்றபோது தமிழக
அரசு ரூடவ்ழத்தமிழ் அகதிகளுக்காக வரவு செலவுத்திட்டத்தில் நிதி
ஒதுக்கியுள்ளது.

எனவே தமிழக மக்களின் இந்த அக்கறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத
வகையில் நடந்து கொள்ள வேண்டியது ரூடவ்ழத்தமிழர்களின் கடமையாகும்.
ரூடவ்ழத்தமிழர்களுக்கும் தமிழகத்திற்குமிடையிலான உறவு பாதிப்படையாத
வகையில் மீனவர் விவகாரம் கையாளப்படல் வேண்டும்.

இந்த விவகாரத்தில் வலுவான மூலோபாயங்களையும்
தந்திரோபாயங்களையும் வகுத்து செயற்பட வேண்டிய பொறுப்பு
ரூடவ்ழத்தமிழர்களுக்கும் உள்ளது. தமிழகத்தமிழர்களுக்கும் உள்ளது. இதற்கு
முதற்படியாக தமிழக-ரூடவ்ழத்தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையேயும் தமிழக-
ரூடவ்ழத் தமிழ் மீனவர்சங்கங்களுக்கிடையேயும் வலுவான உரையாடல் இடம்பெற
வேண்டியது அவசியமானதாகும்.
சம்மந்தப்பட்டவர்கள் இது பற்றி கவனம் செலுத்துவார்களா?

Recommended For You

About the Author: Editor Elukainews