மன்னார் பேசாலையில் 20 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு-சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது.

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 8 ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (19) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

.

-பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பள்ளேவள மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்க ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து செயல்பட்டு குறித்த பகுதிக்குச் சென்று குறித்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளதோடு, சந்தேக நபரான பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேசாலை பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews