இந்திய இராணுவத் தளபதி – இலங்கை விமானப்படைத் தளபதி சந்திப்பு.

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவை நேற்று (16) விமானப்படை தலைமையகத்தில் சந்திதித்தார்.

இந்திய இராணுவத் தளபதி - இலங்கை விமானப்படைத் தளபதி சந்திப்பு-The-Chief-of-Army-Staff-of-the-Indian-Army-Calls-on-the-Commander-of-the-Sri-Lanka-Air-Force

இதன்போது, கொழும்பு விமானப்படைத்தள கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் வாசகே தலைமையிலான விமானப்படை வர்ணஅணிவகுப்பு படைப்பிரிவின் இராணுவ மரியாதையுடன் இந்திய இராணுவ தளபதி வரவேற்கப்பட்டார்.

இந்திய இராணுவத் தளபதி - இலங்கை விமானப்படைத் தளபதி சந்திப்பு-The-Chief-of-Army-Staff-of-the-Indian-Army-Calls-on-the-Commander-of-the-Sri-Lanka-Air-Force

அதனைத் தொடர்ந்து விமானப்படை வரியா பணிப்பாளர்களை சந்தித்த இந்திய இராணுவ தளபதி அனைவருடனும் இணைந்து குழு புகைப்படம் ஒன்றயும் எடுத்துக்கொண்டார் இந்த விஜயத்தில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இந்திய இராணுவத் தளபதி - இலங்கை விமானப்படைத் தளபதி சந்திப்பு-The-Chief-of-Army-Staff-of-the-Indian-Army-Calls-on-the-Commander-of-the-Sri-Lanka-Air-Force

இறுதியாக இலங்கை விமானப்படை தளபதி மற்றும் இந்திய இராணுவ தளபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்று இருவருக்கும் இடையிலான பரஸ்பர கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது தனது தந்தை இந்திய விமானப்படை அதிகாரியாக கடமை புரிந்ததாக இந்திய இராணுவத் தளபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews